சு. சமுத்திரம் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி
சென்னை:
சென்னை சாலை விபத்தில் இறந்த பிரபல எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் உடலுக்கு திமுக தலைவர்கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை-அடையாறு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த சமுத்திரம் சிகிச்சைபலனளிக்காமல் நேற்று காலை மரணமடைந்தார்.
சமுத்திரத்தின் உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள அவருடைய இல்லத்தில்வைக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று காலை நேரில் வந்த கருணாநிதி சமுத்திரத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் வந்திருந்தார்.
மேலும் சென்னை மாநர முன்னாள் மேயர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழகப் பொதுச் செயலாளர்ஆர்.எம். வீரப்பன், சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்களும் வந்து சமுத்திரத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சமுத்திரத்தின் உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
-->