சிறையில் அடைப்பேன்- ஜெ மிரட்டல்: ஆனாலும் அரசு ஊழியர் போராட்டம் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும்நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் செய்வோம் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட போனஸ் மற்றும் பிற சலுகைகளைத் திருப்பித் தரக் கோரி அரசு ஊழியர்கள் தொடர்போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து அரசு ஊழியர் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சு நடத்த முன்வந்தது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணனுடன் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அரசுஊழியர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டியோஜியோ) ஆகிய இரு முக்கிய சங்கங்களின்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன. இதையடுத்து நாளை (10ம் தேதி) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம்போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஜூன் மாதம் 4ம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை:

ஆனால், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசுஎச்சரித்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் அரசுத் துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது.

வேலை நிறுத்தம் செய்தால் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். ஊதியமும் தரப்படமாட்டாது.

போராட்டக் காலத்தில் எந்தவிதமான விடுமுறையும் அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. இந்த நேரத்தில் விடுமுறை எடுத்தால் சம்பளம்கிடைக்காது. திடீர் விடுமுறை எடுப்பவர்கள் குறித்து அந்ததந்த துறையின் செயலாளர்களுக்கு அதிகாரிகள் தகவல் அனுப்ப வேண்டும்.

நாளை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதைத் தடுக்கவே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

அரசு ஊழியர்கள் திட்டவட்டம்

ஆனால், திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் செய்வோம் என அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்களை அடக்கி, ஒடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+