சதாமின் சொந்த ஊர் திக்ரித்தையும் பிடித்தது அமெரிக்கா
திக்ரித்:
சதாம் ஹூசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரையும் அமெரிக்கா கைப்பற்றி விட்டதைத் தொடர்ந்துஈராக் போர் விரைவில் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் ஈராக்கின் மற்றொரு முக்கிய நகரான திக்ரித் நகரையும் நேற்று அமெரிக்காகைப்பற்றியது.
சதாமின் சொந்த ஊரான திக்ரித்துக்குள் நேற்று அமெரிக்கப் படைகள் அதிரடியாக நுழைந்தன.இந்நகரில் நுழையும்போது கடும் எதிர்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்கப் படைகள் நுழைந்தபோது எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை.திக்ரித்துக்குள் சதாம் ஒளிந்திருப்பார் என்றும் முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் அங்குகாணப்படவில்லை.
மேலும் அங்கிருந்த முக்கியமான ஈராக் தலைவர்கள் ஐந்து நாட்களுக்கு முன்பே ஊரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
திக்ரித் நகரின் ஓரிரு இடங்களில் ஈராக் படையினருக்கும் அமெரிக்கப் படையினருக்கும் இடையேசண்டை நடந்து வருகிறது. திக்ரித் நகர் முழுவதும் தங்கள் வசம் வந்து விட்டால் போர் முடிவடைந்துவிட்டதாகத்தான் அர்த்தம் என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-->