சிரியாவை நோக்கி பார்வையை திருப்பிய அமெரிக்கா
வாஷிங்டன்:
ஈராக் தலைவர்களுக்குப் பெருமளவில் உதவிகள் செய்துள்ளதாக சிரியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உள்ள ஒரே வளைகுடா நாடான சிரியாவுக்கு ஈராக்குடன்அவ்வளவு நெருங்கிய உறவு கிடையாதுதான்.
ஆனாலும் ஈராக் மீது போர் தொடுக்கும் அமெரிக்காவின் முடிவை சிரியா கடுமையாக எதிர்க்கத்தொடங்கியது. போர் தொடங்கிய பின்னரும் அமெரிக்காவை சிரியா கடுமையாக எதிர்த்தது.
இதனால் ஈராக்கின் மேற்கில் உள்ள நாடான சிரியாவின் மீது அமெரிக்கா தன் பார்வையைத்திருப்பியுள்ளது.
ஈராக் மீதான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிரியாவை அமெரிக்கா மிரட்டத்தொடங்கியுள்ளது. பல ஈராக் தலைவர்களுக்கும் சிரியா பெருமளவில் உதவியதாகக் குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை அந்நாடு ஏராளமாகப் பதுக்கிவைத்துள்ளதாகவும் புகார் கூறியுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிரியா மறுத்துள்ளது. தங்களிடம் ரசாயான, உயிரியல்ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று அந்நாடு கூறியுள்ளது.
சிரியா மீது கடுமையான குற்றச் சாட்டுக்களை கூறியுள்ளபோதிலும், அந்நாடு மீது போர்தொடுக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை. ஆனால் கடுமையான பொருளாதாரத்தடைகளை சிரியா மீது விதிக்கும் என்று தெரிகிறது.
-->