For Daily Alerts
Just In
துரைமுருகன் வீட்டின் மீது நோட்டீஸ் ஒட்டிய லஞ்ச ஒழிப்புப் போலீஸ்
வேலூர்:
பூட்டிக் கிடந்த முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டின் கதவு மீது விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரிலஞ்ச ஒழிப்புப் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர்.
கடந்த 3 நாட்களாகவே துரை முருகனின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிற. வேலூர் லாங்பஜாரில் உள்ள துரைமுருகனின் மகன் நடத்தி வரும் அச்சகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோல, காந்தி நகரில் உள்ள துரைமுருகனின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றபோது வீடு பூட்டிக் கிடந்தது.இதையடுத்து சோதனைக்கு ஒத்துழைக்கக் கோரி வீட்டின் கதவின் மீது போலீசார் நோட்டீஸ் ஒட்டினர்.
மேலும், வேலூரில் உள்ள துரைமுருகனின் உறவினர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாகத்தெரிகிறது.
Comments
Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]