தலித்துகளை ஆதி தமிழர் என்று அழைக்க வேண்டும்: சங்கராச்சாரியார்
கடலூர்:
தலித் இன மக்களை ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதிலாக ஆதி தமிழர் என்று அழைக்கலாம் என காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
தலித் என்ற அடைமொழியுடன் வரும் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பேசிசமீபத்தில் சங்கராச்சாரியார் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அவருக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அதே போல ஆதி திராவிடர் என்றும் குறிப்பிடக் கூடாது என்றார். இந் நிலையில் ஆதி தமிழர் என்று பெயர்சூட்டியுள்ளார் சங்கராச்சாரியார்.
கடலூரில் மக்கள் குடியரசுக் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுசங்கராச்சாரியார் பேசுகையில்,
தலித்துகளை ஹரிஜன் என்று அழைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். ஹரிஜன் என்ற வார்த்தைக்குப்பதில் ஆதி தமிழர் என்று அழைக்க வேண்டும். அதுதான் சரியான சொல்லாக இருக்க டியும்.
கடவுளுக்கு முன் அனைவரும் ஒன்றே. யாரும், யாரையும் அடிமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. தலித் மக்களின்சமூக மேம்பாட்டுக்காக காஞ்சி மடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களை புனரமைக்க காஞ்சி மடம் நிதியுதவி செய்து வருகிறது.கடலூரில் உள்ள நந்தனார் கோவிலில் கடந்த 1970ம் ஆண்டு காஞ்சி மடத்தின் சார்பில் கும்பாபிஷேகம்நடத்தப்பட்டது.
தலித் மக்களுக்காக காஞ்சி மடத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அவர்கள்அங்கு வரலாம் என்றார்.












Click it and Unblock the Notifications