செஞ்சி ராமசந்திரன் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தனது உதவியாளர் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முதலில் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அவர் பிடிவாதம் பிடித்தார். ஆனால், பிரதமர் வாஜ்பாயின்நெருக்குதலால் அவர் விலக ஒப்புக் கொண்டார்.

இப்போது ராஜினாமா செய்துவிட்டால், சி.பி.ஐ. சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து ஒருவேளை தப்பினால்மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வோம். அப்படி இல்லாவிட்டால் சனிக்கிழமை (இன்று) நடக்கும்அமைச்சரவை மாற்றத்தின்போது நீங்கள் விலக்கப்படுவீர்கள் என வாஜ்பாயின் அலுவலகத்தில் இருந்து அவருக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்றிரவு அவர் தனது ராஜினாமா கடிதத்தை வாஜ்பாய்க்கு அனுப்பி வைத்தார்.

உறவில் பாதிப்பில்லை: ராமச்சந்திரன்

இந் நிலையில் எனது ராஜினாமாவால் மதிமுகவுக்கும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையிலான உறவுபாதிக்கப்படாது என செஞ்சி ராமசந்திரன் கூறினார்.

தனது உதவியாளரின் ஊழல் அம்பலமானதால் பதவியை விட்டு விலகிய ராமச்சந்திரன் இன்று காலை சென்னைதிரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இந்த ஊழல் புகாருக்கு தார்மீக பொறுப்பேற்று நானாகத் தான் பதவி விலகினேன். இந்த விவகாரத்தால் பிரதமர்வாஜ்பாய்க்கு சங்கடம் நேருவதை நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்த ராஜினாமாவால் இருகட்சிகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படாது.

இந்த ஊழல் விஷயத்தில் என்னை மாட்டிவிட சதி நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதையும் சிபிஐவிசாரிக்க வேண்டும். விசாரணையின் இறுதியில் நான் குற்றமற்றவன் என்பது நிரூபணமாகும்.

எங்கள் தலைவர் வைகோவை சிறையில் சென்று சந்திப்பேன். தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்றார் செஞ்சிராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+