போலி அமெரிக்க டாலர்களை அச்சடித்த கும்பல் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்க டாலர் நோட்டுகளை அச்சிட்ட ஒரு கும்பல் சென்னையில் பிடிபட்டது.
சென்னையில் அமெரிக்க போலி டாலர்களின் நடமாட்டம் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடிபோலீசாரிடம் இக் கும்பல் சிக்கியது.
இந்த டாலர்களை அச்சடித்த சென்னையைச் சேர்ந்த காஜா முகமது, கிறிஸ்டி, சக்திவேலு மற்றும் இன்னொருவர்சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யபட்டனர்.
இவர்களுக்கும் மும்பையில் உள்ள போலி டாலர் மாபியா கும்பலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துவிசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications