பளார் பாண்டுரங்கன்
சென்னை:
மீண்டும் அமைச்சராகியுள்ள பாண்டுரங்கன், கடா மீசையுடன் உலா வருபவர், மிக சுவாரஸ்யமானவர்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் காலில் விழுவார்கள், குனிந்து நின்று பவ்யம்காட்டுவார்கள்.
ஆனால், இவரோ ஜெயலலிதாவைப் பார்த்தால் சாமியைப் பார்த்து மாதிரி கன்னத்தில் போட்டுக் கொள்வார்.
(அறைந்துகொள்வார் என்று சொல்வதே சரி. அந்த அளவுக்கு ஓங்கி கன்னத்தில் அடித்துக் கொள்வார்.)
இதைப் பற்றிக் கேட்டால் சாமியை பார்த்தா கன்னத்துல பேட்டுக்கிறது இல்லையா. அம்மாவும் சாமி தான் என்கிறார்.
வள்ளல் தளவாய் சுந்தரம்:
அதிமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது கோர்ட் படிக்கட்டுகளில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தகாலத்தில் கூடவே வருவார் தளவாய் சுந்தரம்.
வழக்கறிஞரான இவர் ஜெயலலிதாவுக்காக வாதாடியது இல்லை. ஆனால், கூடவே வருவார் போவார். இதனால் எம்.பி.பதவி கிடைத்தது. தொடர்ந்து பொதுப் பணித்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறை கிடைத்தது.
ஆனால், வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது கல்வித்துறை அமைச்சராக இருந்த தம்பிதுரையின் கல்லூரிக்கு அரசு நிலத்தைவாரிக் கொடுத்த வள்ளல் இவர். இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே டான்சி நில விவகாரத்தில் சிக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது டென்சனைக் கொடுக்க தம்பிதுரையும், தளவாய்சுந்தரமும் பதவி இழந்தனர்.
இப்போதும் தம்பிதுரை ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார். ஆனால், தளவாய்க்கு நல்ல காலம் பிறந்துள்ளது.












Click it and Unblock the Notifications