For Quick Alerts
For Daily Alerts
Just In
முதலிரவு முடிந்ததும் மாப்பிள்ளை தற்கொலை!!
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முதலிரவு முடிந்தவுடன் மாப்பிள்ளை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பண்ருட்டி அருகே உள்ளது மேல்குமாரமங்கலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவருக்கும்,மஞ்சுளாஎன்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த இரவன்று மணப்பெண்ணும், மணமகனும் முதலிரவுகொண்டாடினார்கள்.
அடுத்த நாள் அதிகாலை மஞ்சுளா விழித்தார். அப்போது குப்பன் மின்விசிறியில் தூக்கு மாட்டி பிணமாகத்தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து மஞ்சுளா அலற, சப்தம் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்துபார்த்தபோது அதிர்ந்துவிட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணம் பிடிக்காத காரணத்தால் குப்பன் தற்கொலைசெய்து கொண்டதாக போலீஸார் கருதுகிறார்கள்.
Comments