For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுய மரியாதை தொட்டிலில் வளர்ந்தவன் நான்.. கருணாநிதி பெருமிதம்

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

சுய மரியாதைத் தொட்டிலில் தவழ்ந்து, புரண்டு வளர்ந்தவன் நான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக பிரமுகரான திருவாரூர் வேணுகோபால் இல்லத் திருமண விழா, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்அரங்கத்தில் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில்,

சுய மரியாதைத் தொட்டிலில் வளர்ந்தவன் நான். எனவேதான் எனது குழந்தைகளுக்கு வெங்கட்ராமன்,ராமச்சந்திரன், சரஸ்வதி என்று பெயர் வைக்காமல் முத்து, அழகிரி, ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன்.

அப்படியும் கூட ஸ்டாலின், அழகிரி என்பதெல்லாம் வடமொழி எழுத்துகளைக் கொண்ட பெயர்களாகஉள்ளனவே என்று குற்றம் சாட்டி வெளிநாட்டு நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்தப் பெயர்களுக்குரியகாரணங்களை ஏற்கனவே நான் பலமுறை விளக்கியுள்ளேன்.

என் தந்தையின் பெயரான முத்துவேலர் என்ற பெயரை முத்துவாக முதல்மகனுக்கு சூட்டினேன். நான் யாருடையபேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்துக்கு வந்தேனோ அவரது பெயரை அழகிரிக்கு சூட்டினேன்.பொதுவுடமை சித்தாந்தந்தை உலகுக்குத் தந்த ஸ்டாலினின் பெயரை மூன்றாவது மகனுக்கு சூட்டினேன்.

அடுத்து தமிழரசு என்று ஒரு மகனுக்கு பெயர் வைத்தேன். ஆக வீடு, நாடு, கொள்கை, மொழி என இத்தனைக்கும்முக்கியத்துவம் தந்து தான் என் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தேன்.

ஆனால், வட மொழியில் ஆர்வம் கொண்டுள்ளவர்களின் பெயர்களில் ஜெ, ஷ, ஸ ஆகியவை வராமல் இருக்காது.இப்போதெல்லாம் சிலர் (முதல்வர் ஜெயலலிதா) குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது ஜெ, ஸ, ஷ வருகிறதாஎன்று பார்த்து, வேண்டுமென்றே வட மொழிப் பெயர்களைத் தான் சூட்டி வருகின்றனர்.

ஆனால் திராவிட இயக்கத்தில் இருக்கும் நானோ, பேராசியரோ அல்லது மற்றவர்களோ, குழந்தைக்கு வைக்கிறஎந்தப் பெயரானாலும் வட மொழிக் கலப்பில்லாமல், தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கிற பெயர்களைத் தான்சூட்டுவோம் என்பதை அனைவரும் அறிவர் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X