அழகிரியுடன் ஸ்டாலின் சந்திப்பு
திருச்சி:
திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் இன்று திருச்சி சிறைக்குச் சென்று ங்குஅடைக்கப்பட்டுள்ள அவரது அண்ணன் அழகிரியைச் சந்தித்தார்.
ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முரசொலி செல்வம் ஆகியோரும் திருச்சிவந்தனர். சென்னையில் இருந்து இன்று காலை திருச்சி வந்து அழகிரியைச் சந்தித்துவிட்டு உடனே சென்னைதிரும்பிவிட்டார் ஸ்டாலின். அவரது காரை திமுக எம்.எல்.ஏ. பரணிகுமார் ஓட்டி வந்தார்.
போலீஸ் காவலில் சுலைமான சேட்:
இதற்கிடையே தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தமுக்கியக் குற்றவாளியான கருதப்படும் இப்ராகிம் சுல்தான் சேட் போலீஸ் காவலுக்குமாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சமீபத்தில் சேட் சரணடைந்தார். அவரை மதுரை 6-வதுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் விசாரணைக்காக சுல்தான் சேட்டை போலீஸ் காவலில் எடுக்க அனுமதிக்குமாறு 6-வதுநீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்தது.
இந்தக் கோரி ஏற்ற நீதிபதி வனிதா, ஜூன் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து சுல்தான்சேட்டை விசாரிக்க அனுமதியளித்தார். மேலும் சுல்தான் சேட்டின் வக்கீல் கனகராஜ்,விசாரணையின்போது தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை உடன் இருக்கவும் நீதிபதிஅனுமதியளித்தார்.
முக்கியக் குற்றவாளி என்பதால் சுல்தான் சேட் பலத்த பாதுகாப்புடன், கை விலங்கிட்டுக் கொண்டுவரப்பட்டார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான இவர் தான் தா.கிருட்டிணனை அரிவாளால்கழுத்தில் வெட்டியதாகத் தெரிகிறது. கூலிக்காக இவர் இக் கொலையைச் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications