உருவானது மாஜி திமுகவினரின் தா.கி.பேரவை: ஜெவை பாராட்டி தீர்மானம்
சிவகங்கை:
திமுகவில் இருந்து சமீபத்தில் கூண்டோடு விலகிய சிவகங்கை திமுகவினர் தா.கிருட்டிணன் பேரவையைஅதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். அதே போல மானாமதுரையிலும் திமுகவினர் கட்சியிலிருந்து விலகி தா.கி.பேரவையை ஆரம்பித்துள்ளனர்.
சிவகங்கை நகராட்சி கவுன்சிலர் சோனைமுத்து கூறுகையில், பேரவையின் முதல் கூட்டம் சிவகங்கையில் நடந்தது.அதில், முதல் தீர்மானமாக தா.கி.படுகொலை தொடர்பாக குற்றவாளிகளைச் செய்து நடவடிக்கை எடுத்த தல்வர்ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெவிக்கப்பட்டது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இன்னும் ஏராளமான திமுகவினர் இந்தப் பேரவையில் சேர முடிவு செய்துள்ளனர்என்றார்.
மானாமதுரையிலும்...
இதேபோல, மானாமதுரையிலும் தா.கி.பேரவை தொடங்கப்பட்டுள்ளது. திமுகவில் இருந்து விலகிய கவுன்சிலர்திலகர் தலைமையில் இந்தப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏராளமான திமுகவினர் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அனைவரும் பேரவையில் இணைவர்என்றும் அவர் தெவித்துள்ளார்.
தா.கி.பேரவை படிப்படியாக ஒவ்வொரு ஊராக தொடங்கப்பட்டு வருவது திமுகவினடையே பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரவையின் பின்னால் அதிமுகவினரின் பண பலமும் இருப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தா.கிருட்டிணனின் முக்குலத்தோர் சமூகத்தினரை திமுகவில் இருந்து ஒட்டுமொத்தாமாக அன்னியப்படுத்தசசிகலாவின் ஆட்களின் பண உதவியுடன் தான் இந்தப் பேரைவை உருவாக்கப்பட்டுள்ளதாக திமுகவினர்கூறுகின்றனர்.
மீண்டும் சிறையில் சுலைமான் சேட்:
தா.கி. கொலையில் முக்கியக் குற்றவாளியான இப்ராகிம் சுலைமான் சேட், 4 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின்மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட இப்ராகிம் சுலைமான் சேட் |
ஆனால், நீதிபதியிடம் பேசிய இப்ராகிம், நான் போலீசாரிடம் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. நான்நிரபராதி, என்னிடம் வெள்ளைத் தாளில் போலீசார் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியுள்ளனர் என்றார்.
இதனால் நீதிமன்றத்திலேயே போலீசாரின் முகம் தொங்கிப் போனது.
போலீஸ் காவல் முடிவடைந்துவிட்டதையடுத்து இப்ராகிமை ஜூன் 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மீண்டும் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
ஏற்கனவே அழகியை 2 நாள் போலீஸார் விசாத்துள்ளனர். மேலும், ஈஸ்வரன் என்ற மற்றொரு நபரையும் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.