வெளிநாட்டுப் பயணிகளை வீரப்பன் கடத்தலாம்: கர்நாடகம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மைசூர், சாம்ராஜ்நகர், மாண்டியா முதுமலை, சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளுக்கு சுற்றுலா வரும்பயணிகளையும், அந்தப் பகுதியின் அரசியல் முக்கியஸ்தர்களையும் கடத்த வீரப்பன் திட்டமிட்டிருப்பதாகத்தெரிகிறது.

இதையடுத்து காட்டுப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாகவெளிநாட்டுப் பயணிகள் மீது வீரப்பன் குறி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதே போல கர்நாடகக் காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அரசியல் முக்கியஸ்தர்களுக்குபோலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வனப் பகுதிகளை ஒட்டிய இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும் விஐபிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மழைக் காலம் தொடங்கிவிட்டதால் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினர்மிகுந்த சிரமங்களைச் சந்திக்க உள்ளனர். இந் நிலையில் அதிரடிப்படையினருக்கு சாட்டிலைட் தொலைபேசிகளைவழங்கவும், இதன் மூலம் அவர்களது செயல் திறனை அதிகரிக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

வனப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களுக்குச் செல்லும் விஐபிக்கள் அப் பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துஉரிய பாதுகாப்பைப் பெற்றுச் செல்லுமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+