For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பால் ஊழல் வழக்கிலிருந்து அதிமுக மாஜி அமைச்சர் விடுவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த பால் ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன்விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் டி. ஜனார்த்தனன். இவரதுஅமைச்சராக இருந்தபோது, 1994ம் ஆண்டு தனியார் பால் வினியோக நிறுவனம் ஒன்றுக்கு தமிழக அரசுக்குச்சொந்தமான ஆவின் நிறுவனத்தின் 785 டன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் விற்பனை செய்யப்பட்டது.

மார்க்கெட் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு அந்தப் பால் விற்பனை செய்யப்பட்டதாக பின்னர்கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அமைச்சர் ரூ. 1.25 கோடி வரை முறைகேடுசெய்ததாகவும் அடுத்து வந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து தற்போது ஜனார்த்தனம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் பட்டியலிலிருந்து அவரது பெயரை அதிமுக அரசு நீக்கியுள்ளது. ஜனார்த்தனத்திற்கு, பால் ஊழலில்தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஊழல் வழக்கி சம்பந்தப்பட்டுள்ள மற்றவர்கள், ஆவின் நிறுவன நிர்வாக இயக்குனர் புஜங்கராவ், பொதுமேலாளர் உஜகார் சிங் மற்றும் 4 பேர்.

இவர்களில் புஜங்கராவ் இறந்து விட்டார். உஜகார் சிங் கடந்த ஜூலை மாதம்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால், அவர் மீது தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதிகோரப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X