ஜனனியின் ரூ. 1.25 கோடி பணம்: வழக்கு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை இளம்பெண் ஜனனியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.25 கோடி பணத்தை ஒப்படைக்கக் கோரிவருமான வரித்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வருகிற 11ம் தேதிக்க ஒத்திவைக்கப்பட்டது.

கஞ்சா கடத்தியதாக கூறி மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனி, அவரது தாயார் ரெஜீனா மற்றும் டிரைவர் சதீஷ்ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜனனியின் வீட்டிலிருந்து ரூ. 1.25 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்தப்பணம் சட்டவிரோதமாக சம்பாதித்தது அல்ல என்று ஜனனியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிப்பதற்காக பணத்தை தங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மதுரை வருமான வரித்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சம்பத் குமாரிடம், ஜனனி தரப்பில் ஆஜரான வக்கழறிஞர், இந்தப் பணம்தொடர்பாக வருகிற 8ம் தேதி ஜனனியுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், எனவே அதுவரை பதில் அளிக்ககால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வருகிற 11ம் தேதிக்குவழக்கை ஒத்திவைத்தார்.

அதேபோல, தனது கார் மற்றும் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஜனனி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணையையும் 11ம் தேதிக்கு நீதிபதி சம்பத் குமார் ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+