பெண் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள 961 சப் இன்ஸ்பெக்டர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வு சென்னையில்இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதிலும் 961 பெண் சப் இன்ஸ்பெக்டர் பதவி காலியாக உள்ளது. இதை நிரப்புவதற்காக 5 நாள்தேர்வு இன்று காலை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் 1635 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
முதல் நாளான இன்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்துஎழுத்துத் தேர்வு, நேர்கமுத் தேர்வு ஆகியவை நடக்கவுள்ளது.
பெண் சப் இன்ஸ்பெக்டர் தேர்வின்போது முன்பு போல கடுமையான தேர்வு முறை தற்போது இல்லை என்பதால்போட்டிகளில் கலந்து கொள்ள வந்த பெண்கள் மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications