For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாமீன் கோரி அழகிரி மீண்டும் மனு தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி, ஜாமீன்கோரி இரண்டாவது முறையாக நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மதுரையில் கடந்த மே 20ம் தேதி தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரி, ஜாமீன் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை செஷன்ஸ் நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி அழகிரி மனுத்த தாக்கல் செய்தார். அம்மனுவும்நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் அவர் கூறுகையில், இவ்வழக்கு தொடர்பாக, மேலும் இருவரை போலீஸார் சட்டவிரோதமாககாவலில் வைத்துள்ளனர். மற்றொருவர் சரணடைந்துள்ளார்.

இதனால் வழக்கின் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மீண்டும் தாக்கல் செய்துள்ள மனுவில்அழகிரி கூறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை(புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X