கர்ப்பமான காதலி-காதலனுக்கு பெண் போலீசார் நடத்திய திடீர் திருமணம்
சென்னை: காதலித்து வந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு, ஆடி மாதத்தைக் காரணம் காட்டி அவரைத் திருமணம் செய்யமறுத்த வாலிபரை, பெண் போலீஸார் தலையிட்டு மணம் முடித்து வைத்தனர்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருபவர் சக்திவேல். இவரது சொந்த ஊர் திண்டிவனம்.சக்திவேல், தன்னுடன் வேலை பார்த்து வந்த வள்ளி என்ற பெண்ணைக் காதலித்தார். காதல் கர்ப்பத்தில் முடிந்தது.
அதன் பிறகு வள்ளியை தவிர்க்க ஆரம்பித்தார் சக்திவேல். தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு வள்ளிவற்புறுத்தவே, ஆடி மாதம் நடக்கிறது, எனவே பின்னர் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நிலைமை எல்லை மீறிப் போவதற்குள் வீட்டில் சொல்லி விடுவோம் என்று நினைத்த வள்ளி பெற்றோரிடம்விஷயத்தைக் கூறியுள்ளார்.
அதிர்ந்து போன அவர்கள், வள்ளியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சக்திவேலிடம் கேட்டுள்ளனர்.
அவர்களிடமும் ஆடி மாதத்தைக் காரணமாக கூறி கல்யாணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் சக்திவேல். மேலும்ஊரிலிருந்து கிளம்பிவிடவும் திட்டமிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அடையாறு பெண் போலீஸ் நிலையத்தில் வள்ளியின் தாயார் ஜெகதாம்பாள் புகார் கொடுத்தார்.
சக்திவேலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த பெண் போலீஸார், உடனடியாக வள்ளியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினர். அதை ஏற்க சக்திவேல் மறுக்கவே, கைது நடவடிக்கை பாயும் என எச்சரித்தனர்.
இதையடுத்து வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தார் சக்திவேல். பின்னர் அடையாறு சிக்னல் அருகே உள்ளபெரிய பாளையத்தம்மன் கோவிலில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நித்யகுமா மற்றும் பெண் காவலர்கள், இரு வீட்டுஉறவினர்கள் முன்னிலையில் காதலி வள்ளி கழுத்தில் தாலியைக் கட்டினார் சக்திவேல்.
பிறகு காவல் நிலையத்திற்கு வந்து அங்கும் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு அறிவுரையும், இனிப்பும்வழங்கி ஆசிர்வதித்தனர் பெண் காவலர்கள்.
சக்தி வேலின் நடவடிக்கைகள் உளவுப் பிரிவினர் மூலம் கண்காணிக்கப்படும் என்றும், வள்ளியை நன்றாகவைத்துக் கொள்ளுமாறும் அவரிடம் கூறப்பட்டுள்ளது.
-->











Click it and Unblock the Notifications