சென்னைவாசிகளின் "மெளன அஞ்சலி"!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் பல ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த சீரணி அரங்கம்தரைமட்டமாக்கப்பட்டதையொட்டி அந்த இடத்தை சென்னை நகர மக்கள் பார்வையிட்டவண்ணம் உள்ளனர்.

இத்தனை நாட்களாக இருந்த சீரணி அரங்கம், இருந்தஇடத்தைப் பார்த்து கிட்டத்தட்ட மெளன அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

கடந்த 1968ம் ஆண்டு கட்டப்பட்டது. சீரணி அரங்கம். அதற்கு முன்பு வரை இந்த இடத்திற்குத் திலகர் திடல்என்றுதான் பெயர் இருந்தது. இங்கு பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், சுப்ரமணிய பாரதியார் என பெரும்தலைவர்கள் பலரும் பேசியுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட காலத்தின்போது, இங்கிருந்துதான் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தலைவர்களின் செய்திகள்சென்று சேரும்.

1963ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் அமைக்கப்பட்ட திமுக சீரணியினர் என்ற படையினரால் இங்குதிறந்தவெளி மேடை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு சீரணி அரங்கம் என்று பெயர் வந்தது.

ஆனால் திலகர் திடல் என்ற பெயரை திமுகவினர் சீரணி அரங்கம் என்று மாற்றி அமைத்ததற்கு அப்போது பலரும்கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் சீரணி அரங்கம் என்ற பெயரே நிலைத்தது.

சீரணி அரங்கம் தரைமட்டமாக்கப்பட்டது, மெரீனா கடற்கரைக்குச் செல்லும் செல்லும் மக்களின் மனதில் சொல்லமுடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது.

காலை வழக்கம்போல நடைப் பயிற்சிக்கு வந்தவர்கள் சீரணி அரங்க மேடையைக் காணாமல்

அதிர்ச்சியுற்றனர். நேற்று வரை இருந்த சீரணி அரங்கம், திடீரென மாயமானது எப்படி என்று அனைவரும்அதிர்ச்சியடைந்தனர். அது இடிக்கப்பட்டது தெரிந்து வருத்தமுற்றனர்.

மேலும் நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் சீரணி அரங்கம் இருந்த இடத்தைப் பார்வையிட்டுவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+