நீதிபதிகள், அதிகாரிகள் மாற்றம்: காஞ்சியிலிருந்து தான் கட்டளைகள் வருகின்றன- கருணாநிதி
சென்னை:
தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோரின் இட மாற்றங்கள் குறித்து காஞ்சிமடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக முரசொலி நாளிதழில் அவர் எழுதியுள்ளதாவது:
இன்னும் ஒரு மாதத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசியர்களை முதல்வர் ஜெயலலிதா மீண்டும்பணியில் சேர்ப்பார் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
அரசின் செயல்பாட்டை அவர் தெரிந்து வைத்திருக்கிறார். இதிலிருந்து, நீதிபதிகள் முதல் அதிகாரிகள் வரையிலானமாற்றங்கள் குறித்து கட்டளையிடுவதும், முடிவு செய்வதும்காஞ்சி மடம்தான் என்பது தெளிவாகிவிட்டது.
பசு வதைத் தடுப்புச் சட்டம் என்ற ஒரு தனிச் சட்டமே தேவையில்லை. உண்பதற்காக எதையுமே கொல்லக் கூடாதுஎன்று ஒரு சட்டம் கொண்டு வந்தால், அந்த சட்டத்தின் கீழ் பசுக்களைக் கொல்வதையும் தடுக்கலாம்.
அதை விட்டுவிட்டு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மனதில் வைத்துக் கொண்டு பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அது மத துவேஷத்திற்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பசு வதைத் தடுப்பு சட்டம் குறித்து கடந்த சில நாட்களாக அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து வருகிறார் பிரதமர்வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.