For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சாவூரில் கனமழை: வீடுகளில் வெள்ளம்- விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

காவிரி டெல்டாவில் பலத்த மழை பெய்து வருகிறது. தஞ்சையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம்புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது.

காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடிக்காக நீரை எதிர்பார்த்து கன்னத்தில் கை வைத்தபடி இருந்தவிவசாயிகளுக்கும், குடி நீர்ப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கும் இந்த மழை வரப் பிரசாதமாகஅமைந்துள்ளது.

கடந்த இரு தினங்களாக மழை பெய்தாலும் நேற்றிரவு தான் தஞ்சையில் மிக பலத்த மழை கொட்டியது. சுமார் 4மணி நேரத்தில் 205 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இப் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளில்பெய்துள்ள பலத்த மழை இது தான்.

இதனால் தஞ்சையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் நீரில் மூழ்கின. வீடுகளிலும் வெள்ளம்புகுந்தது. பல குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதே போல புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள், பட்டுக்கோட்டை, வலங்கைமான், சீர்காழி,மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பகுதிகளிலும கன மழை பெய்தது.

கும்பகோணத்தில் மழையால் ஏற்பட்ட மின் கசிவுக்கு இரு விவசாயிகள் உயிரிழந்தனர். தங்களது மோட்டார் பம்ப்செட்டைத் தொட்டபோது இச் சம்பவம் நடந்தது.

இந்த கன மழை காரணமாக சம்பா பயிரை நட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் இடையேதுளிர்விட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X