For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ மீதான பொடா வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ மற்றும் 8 மதிமுக நிர்வாகிகளை போலீஸார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைகளில்அடைத்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

0இந்த வழக்கில் நேற்று முதல் விசாரணை தொடங்கியது. முதலில் சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன. விசாரணை தொடங்குவதையொட்டி வைகோ உள்ளிட்ட 8 மதிகவினர் நீதிமன்றத்தில்ஆஜராயினர். செவந்தியப்பன் என்பவர் மட்டும் உடல் நிலக்குறைவு காரணமாக வரவில்லை.

செவந்தியப்பன் இல்லாத நிலையில் விசாரணையை மேற்கொள்ளக் கூடாது என்று அவரது வக்கீல் கோக்கைவிடுத்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத போதிலும் கூட, அவரது வக்கீல் இருப்பதால் விசாரணையைத்தள்ளி வைக்கத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இது தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கும் செவந்தியப்பனின் வழக்கறிஞருக்கும் இடையே நீண்ட விவாதம்நடந்தது. அதன் பின்னர் சாட்சியங்களிடம் விசாரணை தொடங்கியது.

முதலில் மதுரை திருமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கவேல் சாட்சியம் அளித்தார். அப்போது,திருமங்கலத்தில் வைகோ உள்ளிட்டவர்கள் பேசிய பொதுக்கூட்டம் நடந்த தேதி குறித்து அவர் தெரிவித்தபோது,மதிமுகவினரின் வழக்கறிஞர்களுக்கும், அரசுத் தரப்பு வக்கீலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சாட்சி தவறான தேதியைச் சொல்வதாக மதிமுகவினரின் வழக்கறிருஞர்கள் வாதிட்டனர்.

பின்னர் தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்குஒத்திவைப்பதாக நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X