For Daily Alerts
Just In
இரவு பணிக்கு வராத அரசு டாக்டர் அதிரடி டிரான்ஸ்பர்
விருதுநகர்:
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இரவுப் பணியின்போது பணிக்கு வராமல் தனது சொந்த கிளினிக்கில்பணியாற்றிய டாக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பல டாக்டர்கள் மருத்துவமனைக்கு வராமல் தங்களது சொந்தகிளினிக்குகள், மருத்துவமனைகளிலேயே அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பான புகார்கள் குவிந்ததையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் விருதுநகர் அரசுமருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது திருநாவுக்கரசு என்ற டாக்டர் இரவுப் பணிக்கு வராதது தெரியவந்தது. இதையடுத்து அவரைஉடனடியாக இடமாற்றம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்.
Comments
Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]