காவிரி ஆணையக் கூட்டம் திடீர் ரத்து
சென்னை:
டெல்லியில் இன்று நடப்பதாக இருந்த காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திடீரென ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டம் அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
வறட்சி காலங்களில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடக்க இருந்தது.
மேலும் காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை எங்கு கணக்கிடுவது என்பது தொடர்பாக தமிழக,கர்நாடக அரசுகளுக்கிடையே மோதல் நிலவுகிறது.இது தொடர்பாக நிபுணர் குழு உருவாக்கியுள்ள பார்முலாவைவிவாதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கோஸ்வாமி தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழு நடப்பதாக இருந்தது.இதில் கலந்து கொள்ள தமிழகம், கர்நாடகம், புதுவை மற்றும் கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்கள், பொதுப்பபணித்துறை, விவசாயத்துறைச் செயலாளர்கள் டெல்லி செல்ல இருந்தனர்.
இந் நிலையில் திடீரென இக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக நான்கு மாநில அரசுகளுக்கும் மத்தியநீர்வளத்துறை தகவல் அனுப்பிவிட்டது.
இக் கூட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications