காவிரி: நாளை தஞ்சையில் விவசாயிகள் அவசர ஆலோசனை
தஞ்சாவூர்:
காவிரிப் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை(சனிக்கிழமை) தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொதுச் செயலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்விவசாயப் பிரிவு தலைவர் துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவின் தலைவர்பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தும், அணைகளில் நீர் நிரம்பிய நிலையிலும், தமிழக காவிரிப் பாசனப் பகுதிக்குத்தண்ணீர் தர தொடர்ந்து அந்த மாநிலம் மறுத்து வருகிறது.
இந் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவே இந்த ஆலோசனைக் கூட்டம்கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மேட்டூரின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 51.88அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,713 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தஞ்சை மாவட்ட விவசாயத்தை மனதில் கொண்டு நீரை அரசு சேமித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து நீர்திறந்துவிடப்படவில்லை.
கர்நாடகம் நீரை விட்டால் இப்போதே அதை காவிரி டெல்டாவுக்கு திறந்திவிட்டுவிட முடியும். அடுத்த பருவ நெல்பயிரையும் பயிரிட்டுவிட முடியும். ஆனால், கர்நாடகம் நீரைத் தராமல் அணைகளில் தேக்கி வைத்துக்கொண்டுள்ளது.