கடலூரில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்தது: 30 தொழிலாளர்கள் காயம்- 7 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில் 30 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.இதில், 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உப்பனார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் இரு தூண்கள் நேற்றிரவில் இடிந்து விழுந்தன.இதையடுத்து அதன் மேல் இருந்த பாலமும் சரிந்து விழுந்தது.
இதன் கீழே பணியாற்றிக் கொண்டிருந்த 30 தொழிலாளர்கள் இதில் படுகாயமடைந்தனர். இதில் 7 பேரின்நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களின் உடல்கள் நசுங்கிப் போயுள்ளன. காயமடைந்தவர்கள் கடலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications