பாஜக எம்.எல்.ஏ.வின் அடாவடி: அடியாள்களுடன் நிருபரைத் தாக்கினார்!
காரைக்குடி:
காரைக்குடி தொகுதி பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர் எச்.ராஜா, தீக்கதிர் நாளிதழின் செய்தியாளரைத் தாக்கினார்.
வழக்கமாக அனைவரையும் மட்டம் தட்டிப் பேசுவதாகவும், பிற கட்சித் தலைவர்களை ஒருமையில்அழைப்பதாகவும் ராஜா மீது புகார்கள் உண்டு. தனது தொகுதியில் அவ்வப்போது ஏதாவது கலாட்டாவில்ஈடுபடுவதும் உண்டு.
இந் நிலையில் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான தீக்கதிர் நிருபரைத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து ராஜா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தீக்கதிரின் மானாமதுரை நிருபரான ராமச்சந்திரன், சமீபத்தில், எம்.எல்.ஏ. ராஜா குறித்து ஒரு கட்டுரையைஎழுதியிருந்தார். இதில் வெளியான சில உண்மைகளால் கோபம் கொண்ட ராஜா, தனது ஆதரவாளர்கள் மூலம்ராமச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
எம்.எல்.ஏ. குறித்து மேலும் சில தகவல்களை தருவதாக கூறி ஒரு இடத்திற்கு அந்த நிருபரை வரச் செய்துள்ளனர்.அங்கு வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். எம்.எல்.ஏ. ராஜாவும் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடிநிருபரைத் தாக்கியுள்ளார்.