For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தொடர் சோதனைக்கு தனிப் படைகள்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

தமிழகத்தில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்) தொடர்ந்து அதிரடிசோதனை நடத்த தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் ராமலிங்கம்தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 45 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 17அலுவலகங்களில் தான் அதிக அளவில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம்உள்ளன.

இதைத் தொடர்ந்தே அங்கு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. மற்ற அலுவகங்களில் முறைகேடுகள்நடக்கிறதா என்பது குறித்து விசாரிக்கவும், ரெய்ட் நடத்தவும் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப்படையினர் அவ்வப்போது சோதனைகளில் ஈடுபடுவர்.

திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி ரூ. 15 லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.இதனால் தான் 17 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபோலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X