அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி: லட்சக்கணக்கானோர் தவிப்பு
Subscribe to Oneindia Tamil
நார்த் கரோலினா:
அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தை சூறாவளிப் புயல் காற்று தாக்கியதில் பயங்கர சேதம்ஏற்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் வீடுகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன.
பயங்கர காற்றுடன் கடும் மழையும் பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மரங்கள் நிறைந்தஇந்த மாகாணத்தில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
இந்த புயலை முன்னிட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் நார்த் கரோலினா மாகாணத்தில்பல்வேறு நகர்களுக்கும் தங்களது விமான சேவையை நிறுத்துவிட்டன. மேலும் ரயில் போக்குவரத்தும்தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நார்த் கரோலினா தவிர விர்ஜீனியா, மேரிலேண்ட், கொலம்பியா, நியூஜெர்ஸி ஆகிய இடங்களிலும் இந்தப்புயலின் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications