மகளுக்கு காதல் கடிதம் தந்த மாணவரின் விரலை துண்டித்து தந்தை!!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வாணியம்பாடி அருகே ஒரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவரின் விரல்களை அந்த மாணவியின்தந்தை, சகோதரர் ஆகியோர் சேர்ந்து துண்டித்தனர்.
இதை அந்த மாணவி தனது தந்தை சின்னசாமியிடம் கூறவே, அவரும், அவரது சகோதரர் தேவேந்திரன் மற்றும்உறவினர்கள் இருவரும் கங்காதரன் வீட்டுக்கு சென்றனர். அங்கு தனியே இருந்த கங்காதரனைத் தாக்கினர்.பின்னர் அவது வலதுகை ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலை கத்தியால் வெட்டித் துண்டித்து விட்டுதப்பியோடிவிட்டனர்.
விரல்கள் துண்டாகி ரத்தம் கொட்டியதால் மயக்கமடைந்த கங்காதரன் பின்னர் திருப்பத்தூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அம்பலூர் போலீஸார் மாணவியின் தந்தை சின்னசாமி, சகோதரர் தேவேந்திரன்உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications