For Daily Alerts
Just In
புலிகள் மீதான தடையை நீட்டித்தது அமெரிக்கா
வாஷிங்டன்:
விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட 25 அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்கா மீண்டும்அறிவித்துள்ளது.
1997ம் ஆண்டில் இந்த அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்கா அறிவித்து, இந்த இயக்கங்களுக்குஅமெரிக்காவில் வசிக்கும் யாரும் எந்தவித உதவிகளையும் செய்யக் கூடாது என தடை விதித்தது. இந்தத் தடை1999ம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. இந்த தடை இன்றுடன் (அக்டோபர் 3) காலவதியாகிறது.
இதையடுத்து இந்தத் தடையை அமெரிக்கா நேற்று மீண்டும் நீட்டித்தது.
எல்.டி.டி.ஈ தவிர பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ், காஷ்மீரில் இயங்கி பாகிஸ்தான் தீவிரவாதஅமைப்புகளான லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகிய அமைப்புகள் உள்பட 25 அமைப்புகளைதீவிரவாத இயக்கங்களாக அறிவித்து தடையை நீட்டித்துள்ளது.


