சிறையில் அடைக்கப்பட்டார் சரவண பவன் ராஜகோபால்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளராஜகோபால் தனது வழக்கறிஞருடன் ஜீவஜோதியின் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாகவும், கடத்த முயன்றதாகவும்ராஜகோபால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவரை நாகை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
இந்த ஜாமீனை எதிர்த்து அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து,ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் இந்த கடத்தல் வழக்கு விசாரணை முடியும் வரை அவரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ராஜகோபால் நேற்று மாலை போலீஸாரிடம் சரணடைந்தார். இதையடுத்து அவர் சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் ரத்தானது: மீண்டும் சிறைக்குப் போகிறார் சரவண பவன் அண்ணாச்சி