தமிழகம், புதுவையில் தொடர்ந்து மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றும் தொடர்ந்து மழை பெய்யும் எனவானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை வங்க்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. இந்த புயல் சின்னம்காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுவையிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக வால்பாறையில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. ஜெயம்கொண்டத்தில் 80 மி.மீயும்,கிருஷ்ணகிரியில் 70 மி.மீ., செங்கோட்டையில் 60 மி.மீ., சிதம்பரம், வலங்கைமான் மற்றும் அரூரில் 50 மி.மீ.,மயிலாடுதுறையில் 40 மி.மீயும். மழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் குற்றால அருகளில் திடீர் வெள்ளப் பெருக்கு எடுத்துள்ளது.இந்த திடீர் சீசன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications