For Quick Alerts
For Daily Alerts
Just In
டிஸ்மிஸ் விசாரணை: இன்னும் 1,072 பேர் மட்டுமே பாக்கி!
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 6,072 பேரில் 1,072 பேர் மட்டுமேஇன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளனர்.
அவர்களிடம் இந்த மாத இறுதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072பேரின் மீதான வழக்குகள் குறித்து 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 5,000 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. இன்னும் 1,072 பேரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது.
இவர்களிடமும் விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகளின் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில்அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan simran kiran kural ponnaiyan jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, October 13, 2003, 5:30 [IST]