இன்று நாகப்பட்டிணம் செல்கிறார் ஜெ: காத்திருக்கின்றன கறுப்புக் கொடிகள்
சென்னை:
காவிரியில் மிகத் தாமதமாக நீர் திறந்துவிடப்பட்டாலும், போதிய நீர் வராமல் விவசாயிகள் கடும்எரிச்சலடைந்துள்ளனர்.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று நாகப்பட்டனம் செல்கிறார். அங்கு ரூ. 260 கோடி மதிப்புள்ள நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக நாகப்பட்டனம் வருகிறார் ஜெயலலிதா. பிற்பகல் 2 மணிக்கு தனிவிமானம் மூலம் திருச்சி செல்லும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகை செல்கிறார்.
நாகப்பட்டிணம் ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். நலிந்தோருக்கு அரசு உதவிகளையும் அவர் வழங்குகிறார். நிகழ்ச்சிக்குசபாநிாயகர் காளித்து தலைமை வகிக்கிறார்.
கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற ஜெயலலிதா முயற்சிக்கவில்லை என்று கூறி வரும் காவிரி டெல்டாபகுதி விவசாயிகள், இலவச மின்சாரத்தையும் தமிழக அரசு ரத்து செய்து விட்டதால் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இந் நிலையில் முதல்வரின் பயணத்தை கருத்தில் கொண்டு கடந்த வாரம் தான் மேட்டூர் அணையில் இருந்துகாவிரியில் நீரைத் திறந்துவிட்டது அரசு. தண்ணீர் விட்டதால் மகிழ்ச்சியில் இருந்தாலும், வரும் நீர் போதுமானதாகஇல்லை என்ற கடுப்பில் உள்ளனர் விவசாயிகள்.
இதனால் நாகை வரும் ஜெயலலிதாவுக்கு வீதிகள் தோறும் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளனர்.இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த பரபரப்பான சூழலில் ஜெயலலிதா நாகை செல்வதால் அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications