For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகனேக்கல் அருவிகளில் கொட்டுகிறது நீர்: சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கலில் உள்ள நீர் வீழ்ச்சியில் காவிரி நீர் கொட்டிக் கொண்டுள்ளது. இதனன் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது.

பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் ஓகனேக்கல் நீர்வீழ்ச்சி மூலமாகத் தான் காவிரி ஆறு தமிழகத்திற்குள் காலெடி எடுத்துவைக்கிறது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு காவியில் தண்ணீர் திறந்துவிடாததாலும், ஓகனேக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து இல்லை.

இந் நிலையில் தற்போது கர்நாடகதிலும் தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடகஅணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், ஓகனேக்கல் நீர் வீழ்ச்சிக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது.

இதனால் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நீர் வீழ்ச்சியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இரண்டுஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட ஓகனேக்கல் நீர் வீழ்ச்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அங்குவியாபாரமும் சுறுசுறுப்படைந்துள்ளது.

வீழ்ச்சியின் அடியிலேயே பாடி ஆயில் மஸாஜ், உயிருடன் பிடிக்கப்பட்ட மீன்களின் சுடான வறுவல் எனகலைகட்டிக் கொண்டிருக்கிறது ஓகேனக்கல்.

முடிஞ்சா ஒரு நடை போய்ட்டு வாங்களேன்!

Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X