சென்னையில் ஓட்டைப் பிரித்து வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த ரூ. 50,000 மதிப்புள்ளநகைகள் மற்றும் 2 செல்போன்களைத் திருடிச் சென்றனர்.
சென்னை மயிலாப்பூர்,சமஸ்கிருத காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டுக்குள் நேற்று இரவு சிலர்ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கினர். பின்னர் வீட்டில் இருந்த ரூ. 50,000 மதிப்புள்ள நகைகள், 2 செல்போன்களை திருடினர்.
அந்த சமயத்தில் ராமச்சந்திரனின் தாயார் எழுந்து வரவே திருடர்கள் ஓடி விட்டனர். இதுகுறித்து மயிலாப்பூர்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீட்டில் திருட்டு நடப்பது இரண்டாவது முறையாகும்.












Click it and Unblock the Notifications