For Daily Alerts
Just In
சென்னையில் ஓட்டைப் பிரித்து வீட்டில் கொள்ளை
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த ரூ. 50,000 மதிப்புள்ளநகைகள் மற்றும் 2 செல்போன்களைத் திருடிச் சென்றனர்.
சென்னை மயிலாப்பூர்,சமஸ்கிருத காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டுக்குள் நேற்று இரவு சிலர்ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கினர். பின்னர் வீட்டில் இருந்த ரூ. 50,000 மதிப்புள்ள நகைகள், 2 செல்போன்களை திருடினர்.
அந்த சமயத்தில் ராமச்சந்திரனின் தாயார் எழுந்து வரவே திருடர்கள் ஓடி விட்டனர். இதுகுறித்து மயிலாப்பூர்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீட்டில் திருட்டு நடப்பது இரண்டாவது முறையாகும்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran uranium electricity mani kural art gallery florals jothika amoga
Story first published: Friday, October 17, 2003, 5:30 [IST]