சர்க்கரை ஆலைகளில் மது தயாரிக்க ராமதாஸ் யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மது தயாரிக்க தமிழக அரசு அனுமதித்தால், தமிழக அரசுக்கு அதிக வருவாய்கிடைப்பதோடு, சர்க்கரை ஆலைகளும் லாபம் அடையும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு பக்கம் வருவாய் இல்லையே என்று தமிழக அரசுபுலம்புகிறது. மறுபக்கம், வருவாய் தரக்கூடிய மதுபான விற்பனையை தனியார்களிடமிருந்து பறித்துள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மது தயாரிக்க தமிழக அரசு முன்வந்தால் நிச்சயம் கூடுதல் வருவாய் அரசுக்குக்கிடைக்கும்.
தமிழக அரசே நேரடியாக மது விற்பனை செய்வதன் மூலம் மட்டும் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியாது என்றுஅவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications