அந்தமான் கப்பல் கொலை: சமையல்காரர் கைது
சென்னை:
நடுக்கடலில் இஸ்ரேலிய வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி பிடிபட்டார். கப்பலின்சமையல் கூடத்தில் வேலை பார்த்து வந்தவர்தான் இந்தக் கொலையைச் செய்தவர் என்று தெரியவந்துள்ளது.
அந்தமானிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த பயணிகள் கப்பலில் காதலியுடன் உறங்கிக் கொண்டிருந்தஇஸ்ரேலிய வாலிபர் கோகன் கோயல் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை போலீஸார்விசாரணை நடத்தினர்.
கொலையாளியின் முதுகுப்புறத்தைப் பார்த்ததாக கொலை செய்யப்பட்டவரின் காதலி எலிசபெத் கூறியதையடுத்துகப்பலில் பயணம் செய்தவர்களை நடக்க வைத்து அதைப் பின்புறத்தில் இருந்து போலீஸார் வீடியோ படம்எடுத்தனர். அந்தப் படங்களை எலிசபெத்திடம் போட்டுக் காட்டியபோது அவர் கொலையாளியை அடையாளம்காட்டினார்.
அந்த நபரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது கொலையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டார். அவர்பெயர் ராஜேஸ்பால் (26). அந்தமானைச் சேர்ந்த அவர் கப்பலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.கொலைக்கான காரணமாக அவர் கூறியதாவது:
கப்பலில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்ட இடத்தில் கோகன் கோயல் சிகரெட் பிடித்தார். அதை நான்தடுத்தபோது, அவர் என்னை அடித்துவிட்டார். அந்தக் கோபத்தில்தான் அவரைக் கத்தியால் கழுத்தில் குத்திவிட்டுஓடிவிட்டேன் என்றார். கொலையாளி பிடிபட்டதையடுத்து விசாரணைக்காக காத்திருந்த மற்ற 14 வெளிநாட்டுப்பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் இந்தக் கொலை செய்தியை இஸ்ரேல் நாட்டுப் பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்துபரபரப்பாக வெளியிட்டுள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் அரசு இந்திய அரசிடம் கொலை விவரம் குறித்துதெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதுரகத்தில் இது பற்றியவிவரமான அறிக்கையை தமிழக போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த கொலை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், இது தொடர்பாக நடந்த விசாரணைகள்,பிரேதப் பரிசோதனை என அனைத்தையும் சென்னை போலீஸார் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
கோகன் கோயலின் உடலை சென்னை வந்து பெற்றுக் கொள்ள அவரின் உறவினர்கள் முன் வராத நிலையில்,இஸ்ரேலிய தூதரகம் மூலம் அவரது உடலை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பி வைக்க போலீஸார் முடிவு செய்தனர்.இதனையடுத்து கோகனின் உடல் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதலி எலிசபெத்தும் உடன்சென்றுள்ளார்.
-
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா?












Click it and Unblock the Notifications