காங்கிரஸுக்கு பாண்டி. கிடையாது: கருணாநிதி உறுதி
சென்னை:
பா.ம.கவுக்கு கொடுத்த பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குத் தர முடியாது என்று திமுகதலைவர் கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு நேற்று வந்த காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மன்மோகன் சிங், கமல்நாத் ஆகியோர் திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
அவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், பாண்டிச்சேரியைபா.ம.கவுக்கு கொடுத்தாகி விட்டது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவேஅதை வேறு கட்சிக்கு கொடுக்க இயலாது. மேலும், பா.ம.கவுக்கு பாண்டிச்சேரி என்பது காங்கிரஸுடன் திமுகவுக்குஉறவு ஏற்படுவதற்கு முன்பே ஏற்பட்ட ஒப்பந்தம்.
மன்மோகன் சிங்கும், கமல்நாத்தும் என்னிடம் பேசுகையில் பாண்டிச்சேரி தொடர்பாக பெரிய அளவில்கோரிக்கை வைக்கவில்லை. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் போட்டியிடும்தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்.
இரு கட்சிகளின் தேர்தல் குழுக்களும் கூடி விவாதித்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துபேசி முடிவு செய்யும். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும்.இல்லாவிட்டால் குழப்பமாகி விடும் என்றார் கருணாநிதி.