நாளை முதல் பிளஸ் 2 தேர்வு: 5.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (10ம் தேதி) துவங்குகிறது. 1,444 மையங்களில் ஐந்தரை லட்சம்மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மற்றும் தனித்தேர்வுகள் நாளை முதல் துவங்குகின்றன.பள்ளிகள் மூலம் ஆண்கள் 2.57 லட்சம் பேரும், பெண்கள் 2.55 லட்சம் பேரும் என மொத்தம் 5.13 லட்சம்மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
தனித்தேர்வு மூலம் 41,815 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். சென்னை நகரில் மட்டும் 126 மையங்களில்44,459 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.
நாளை மொழி முதற்தாள் தேர்வு நடக்கிறது. இதைதொடர்ந்து இம்மாதம் 31ம் தேதிவரை தேர்வு நடைபெறுகிறது.தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் முழு வீச்சில்செய்துள்ளது.
"பறக்கும் படை தயார் :
மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிப்பதற்கு "பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் பல "பறக்கும் படைகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வரும் அனைத்து தேர்வு மையங்களையும் அவ்வப்போது திடீர் திடீரென்றுசோதனை செய்வார்கள். மாணவர்கள் பிடிபட்டால் வேறு பேச்சே கிடையாது. பேப்பரை மடித்து கொடுத்துவிட்டுநடையை கட்ட வேண்டியதுதான். எனவே, மாணவர்கள் அனைவரும் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாமல்தேர்வெழுதுங்கள்.












Click it and Unblock the Notifications