நாளை தொடங்குகிறது வைகோவின் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடக்குகிறார்.
திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம்நாளை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் வைகோ தனது தேர்தல்பிரச்சாரத்தைத் தொடக்குகிறார்.
கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன், பொருளாளர் கண்ணப்பன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சிராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
பொடா சிறைவாசத்துக்குப் பின் வைகோ முதன் முறையாக திருச்சி வருகிறார் என்பதால் அவருக்குபிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க மதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications