தேனி, திண்டுக்கல்லில் திடீர் கன மழை: இடி தாக்கி 3 பேர் பலி
தேனி:
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திண்டுக்கல்லிலும் வியாழக்கிழமை திடீர் கன மழை பெய்து மக்களைஇன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தது.
கடும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகமே வெயிலில் சிக்கித் தவித்து வருகிறது. இந் நிலையில்தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் திடீரென கன மழை பெய்துள்ளது.
வைகை அணைப் பகுதியில்தான் மிகவும் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால்அணைக்கு நீர்வரத்து சற்றே உயரும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளதால்மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெயில் கொடுமை குறைவதோடு, குடிநீர்ப் பிரச்சினையும் ஓரளவு தீரும் என்றுஅவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இடி தாக்கி 3 பேர் சாவு:
இந் நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள ராஜசாவடி என்ற இடத்தில் ஆற்றில் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள்மீது இடி தாக்கியது. இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.