இந்திய விமானப் படை: அமெரிக்கா ஆச்சரியம்
வாஷிங்டன்:
இந்தியா விமானப் படையுடன் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டபோது, பலமுறை இந்தியாவிடம்அமெரிக்க விமானப் படையினர் தோற்றதாக அந் நாட்டு மூத்த விமானப் படை அதிகாரி கவலைதெரிவித்துள்ளார்.
ஏவியேசன் வீக்லி சர்வதேச இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விவரம்:
இந்தியாவில் குவாலியரில் நடந்த கூட்டுப் பயிற்சியின்போது அமெரிக்காவின் நவீன எப்-15சி ரகபோர் விமானங்களை இந்திய விமானப் படையினர் தனது சுகோய்-30, மிராஜ்- 2000, மிக் ரகவிமானங்களைக் கொண்டு முடக்கினர்.
குறிப்பாக சுகோய் விமானங்கள் அமெரிக்க விமானங்களை விட அதி நவீனமாக உள்ளன.
இதனால் விமானப் படையைப் பொறுத்தவரை நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்ற அதீதமானநம்பிக்கையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்வது நல்லது. உடனடியாக அடுத்த தலைமுறைவிமானங்களான ராப்டர், ஜாயின்ட் ஸ்டிரைக் பைட்டர் போன்ற நவீன போர் விமானங்களைத்தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
சுகோய் விமானங்களைக் கொண்டு மட்டுமல்ல, பழைய மிக் ரக விமானங்களைக் கொண்டும்அமெரிக்க விமானங்களை இந்திய விமானிகள் விஞ்சினர். இது அவர்களது பயிற்சித் திறனைவெளிக்காட்டியது.
இந்தியாவுடன் நடத்தப்பட்ட கூட்டுப் போர் பயிற்சி அமெரிக்காவுக்கு ஒரு கண் திறப்பு தான் என்றுகூறியுள்ளார்.
இந் நிலையில் அமெரிக்காவில் நடக்கும் போர்ப் பயிற்சியில் பங்கேற்க, சுகோய், மிராஜ், ஜாகுவார்,மிக் ரக போர் விமானங்கள் ஐ.எல். ரக ராணுவ சரக்கு விமானங்களுடன் 200 பேர் கொண்ட இந்தியவிமானப் படைக் குழு அமெரிக்கா கிளம்பியுள்ளது.