சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த் திருவிழாவில் நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர்சிலைகளை அலங்காரம் செய்யப்பட்ட 5 தேர்களில் வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் 5 தேர்களின்வடங்களை பிடித்து இழுத்துச் சென்றனர். தேர்கள் கீழ வீதியில் புறப்பட்டு தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிவழியாக மீண்டும் கீழ வீதியை வந்தடைந்தது.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.விழாவையொட்டி சிதம்பரத்தில் இறைச்சி, மதுபானங்கள் விற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications