எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க மன்மோகன் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடாளுமன்றத்தில் தங்கு தடையின்றி விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றுபிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம்ஆற்றிய உரையில் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதுநடைபெற்ற விவாதத்தை எதிர்க்கட்சியினர் தடுத்தனர். இத்தகைய செயல்கள் கவலை தருகின்றன.

நாடாளுமன்றத்தில் தங்குதடையின்றி விவாதங்கள் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடரஎதிர்க்கட்சிகள் அனுமதித்திருந்தால் நாட்டு மக்கள் பயனடைந்திருப்பார்கள். குடியரசுத் தலைவரின் உரையில்இடம்பெற்றிருந்த அம்சங்களை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

அனைவருக்கும் பொது சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் ஆரம்பக் கல்வி, பெண்கள் கல்விக்குஊக்குவிப்பு, வசதியற்ற மாணவர்களுக்கு மதிய உணவு, மதநல்லிணக்கத்தைக் காப்பது, சிறுபான்மை இனமக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுத்தல், சமூக நீதியைப் பாதுகாப்பது, புதிய வேலைவாய்ப்புகளைஉருவாக்குவது,

குறைந்தபட்ச செயல்திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்துவது, வேளாண் துறையில் தனியார் மற்றும் அரசுமுதலீடுகளை அதிகரிப்பது ஆகியவை அரசின் செயல்திட்டமாக அமையும். அதிக பொருளாதார வளர்ச்சி,நகரமயமாக்கம், வேளாண் துறையில் நவீனமயம் ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றுகூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+