கருணா: சந்திரிகாவுக்கு வைகோ கண்டனம்
சென்னை:
அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதமாக கருணாவுக்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅடைக்கலம் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பொடா சட்டத்தை வாபஸ் பெறுவது என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். அதற்கான நடைமுறைகள்நடந்து வருகின்றன. அமைச்சரவையில் சேர்வதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.
சேது சமுத்திர திட்டத்தை விரைவுபடுத்தி, போதிய நிதியை ஒதுக்க வேண்டும். இந்தத் திட்டம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று தமிழக அரசு கருதுமேயானால் அதனை வெளிப்படையாக சொல்லட்டும்.
மூத்த தலைவரான வாஜ்பாயை பாஜகவினர் அவமானப்படுத்துவது வேதனையளிக்கிறது.
புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய கருணாவுக்கு இலங்கை ராணுவம் ஆதரவளித்ததாக செய்திகள் வந்துள்ளன.அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்காக சந்திரிகா முயல்வதாக முன்பே கூறினேன். சந்திரிகாவின்சுயரூபம் இப்போது தெரிந்து விட்டது.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவ வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்என்பது மதிமுகவின் கருத்து. அதற்காக தடையை நீக்க வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை நிர்பந்திக்கமாட்டோம். வருங்காலத்தில் புலிகள் மீதான தடையை நீக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் பழைய விஷயங்களைநினைத்துக் கொண்டிருந்தால் பிரச்னையை தீர்க்க முடியாது என்றார்.
பாமக- நடிகர் விஜயகாந்த் மோதல் குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து தெரிவிக்க வைகோ மறுத்து விட்டார்.தேர்தலை சந்திக்காமல் அமைச்சராவது சரியா என்று கேட்கப்பட்டபோது, அவ்வாறு விதி இருக்கும்போதுஅமைச்சராக வருவதில் என்ன தவறு என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications