ரஜினி ஆதரவை பெற விஜயகாந்த் முடிவு
சென்னை:
பாமக எதிர்ப்பு விவகாரத்தில் ஏற்கனவே அனுபவம் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவைப் பெற விஜயகாந்த்முடிவு செய்துள்ளார்.
பாமகவினரின் கடும் எதிர்ப்பை ரசிகர்கள் ஒரு பக்கம் சமாளித்துக் கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து விஜயகாந்த் படு தீவிரமாக ஆலோசனைகளை முடுக்கி விட்டுள்ளார்.
கோவையில் உள்ள ராவுத்தர் தோட்ட இல்லத்தில் நிலை கொண்டுள்ள விஜயகாந்த் அங்கிருந்தபடியே மாநிலம்முழுவதிலும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்துகிறார்.
இந் நிலையில் இன்று சென்னை வரத் திட்டமிட்டுள்ள விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து பாமகஎதிர்ப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே பாமகவினரின் கடுமையானவிமர்சனங்களை சந்தித்துள்ள ரஜினிகாந்த்தின் ஆதரவு தனக்குத் தேவை என்று ரஜினியிடம் வலியுறுத்தவுள்ளாராம்விஜயகாந்த்.
அத்தோடு பாமகவைக் கண்டித்து சென்னையில், ஒரே மேடையில் உண்ணாவிரதம் இருப்பது குறித்து ரஜினியுடன்,விஜயகாந்த் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த உண்ணாவிரதத் திட்டம் உறுதியானால், மொத்தத்திரையுலகையும் ஒன்று திரட்டவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி திரையுலகில் உள்ள முக்கிய சங்கங்கள் அனைத்தும் விஜயகாந்த்துக்கு ஆதரவாகஉள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஜூலை 1ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்ததுக்குச் சொந்தமான ஆண்டாள்அழகர் திருமண மண்டபத்தில் நடக்கவுள்ள ரசிகர் மன்ற முக்கிய ஆலோசனைக்குப் பிறகு விஜயகாந்த் புதியஅரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications