ஆந்திராவில் காதல் கொலை: சென்னையில் சரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கல்லூரியில் வைத்து மாணவியை படுகொலை செய்து விட்டு தப்பிய மாணவன், சென்னைகாவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தார்.

விஜயவாடாவைச் சேர்ந்த கல்லூரியில் படித்து வந்தவர் லட்சுமி. இவருடன் படித்து வந்தவர் மனோகரா. இவர், லட்சுமியைக்காதலித்துள்ளார், ஆனால் அதை ஏற்க லட்சுமி மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனோகரா, வகுப்பறையில் வைத்தே லட்சுமியை கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டுத்தலைமறைவானார். அவரை விஜயவாடா போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந் நிலையில் மனோகரா சென்னைக்குத் தப்பி வந்தார். இங்குள்ள காவல்துறை கமிஷ்னர் அலுவலகத்தில் அவர் சரணடைந்தார்.

அவரிடம் இணை ஆணையர் சைலேந்திரபாபு தீவிர விசாரணை நடத்தினார். அவரை விரைவில் விஜயவாடா போலீஸாரிடம்ஒப்படைக்க இருப்பதாக சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+